Sunday, 12 February 2012

தமிழ்சினிமாவை விட்டு விலகியது ஏன்? தமன்னா


தமிழ் சினிமாவை விட்டு விலகியது ஏன் என்ற கேள்விக்கு நடிகை தமன்னா பதில் அளித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக, ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை தமன்னா. ஏனோ சில காரணங்களால் தமிழ் சினிமாவில் நடிக்காமல் விலகியிருக்கிறார். இந்த விலகலுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், தமன்னா வாயில் இருந்து எந்தவொரு காரணமும் சொல்லப்படவில்லை.

Saturday, 11 February 2012

ரஜினியின் புகழ்பெற்ற கேரக்டர் பெயரை தலைப்பாக்கிய கார்த்தி


சகுனிக்குப் பிறகு தான் நடிக்கும் அடுத்த படத்துக்கு ரஜினியின் புகழ்பெற்ற ஒரு கேரக்டர் பெயரையே தலைப்பாக்கியுள்ளார் கார்த்தி.
‘என் பேர கேட்டா அழுவுற குழந்தை கூட வாயை மூடும்’ என்பார் வில்லன்.
அதற்கு ரஜினி, ‘கண்ணா.. அதே குழந்தை கிட்ட என் பேரை சொல்லிப்பாரு… அவங்கம்மா வாயையும் சேர்த்து மூடும்,’ என்பார் ஹீரோ…

Friday, 10 February 2012

மின்வெட்டில் சாதனை - கருணாநிதி, மின்சாரம் வரும் போகும் என்ற நிலை - விஜயகாந்த்


தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது
இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதலிடத்துக்கு கொண்டு வருவதே எனது லட்சியம் என்றார் முதலவர் ஜெயலலிதா. விவசாயமும், தொழில்களும் வளர்ந்தால்தான் தமிழ்நாட்டில் வளர்ச்சி ஏற்படும். அதற்கு மின்சாரம் இன்றியமையாதது.

Thursday, 9 February 2012

அரசியலுக்கு வர எனக்கு எந்த தகுதியும் கிடையாது : அஜித் அதிரடி பேட்டி!


எனக்கு சினிமா மட்டும் தான் தெரியும், அரசியல் தெரியாது. அரசியலுக்கு வர எனக்கு எந்த தகுதியும் கிடையாது நடிகர் அஜித் அதிரடியாக கூறியிருக்கிறார். தற்போது பில்லா-2 படத்தில் பிஸியாக இருக்கும் அஜித், எதிர்காலத்தில் அரசியலுக்கு வரும் எண்ணம் இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

Wednesday, 8 February 2012

பில்லா இரண்டில் படத்தில் காஸ்ட்லி ஹெலிகாப்டர் ஃபைட்!


பில்லா இரண்டாம் பாகம் படத்தில் நடித்து முடித்துவிட்ட அஜித்தை அடுத்து இயக்கப் போகிறார்
`சிறுத்தை'  பட இயக்குனர் சிவா.  அஜித்துக்கு இவர் சொன்ன முதல் கதையே பிடித்துப்போனதால் செம குஷியாக அந்தப் படத்துக்கான திரைக்கதையை உருவாக்கத் தொடங்கி விட்டார். "எந்த மாதிரியான அஜித்தை திரைக்குத் தரப்போகிறீர்கள்?'' என்று சிவாவிடம் கேட்டால்
தொழில் நேர்த்தியான பதில் வருகிறது இயக்குனரிடமிருந்து…“ உலக அளவில் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர்கள் சிலரின் ஸ்டைல் ஆக்டிங்கை நான் அஜித்திடம் பார்க்கிறேன். அஜித்தின் இந்த தனித்துவமான திறமையை வெளிகொண்டும் வகையில்  என் இயக்கத்தில் அவரைப் பார்க்கலாம்.
அதற்கான திரைக்கதையை உருவாக்கத் தொடங்கும்போதே ஸ்டைலான அஜித் என் மனத்திரைக்குள் வந்து விட்டார்...'' என்கிறார்.
சிவா ஒருபக்கம் இப்படி மிரட்டிக்கொண்டிருக்க இன்னோரு பக்கம் பில்லா இரண்டிற்காக எடுக்கப்பட்டிருக்கும் ஒரு ஹெலிகாப்டர் பைட் பற்றி இப்போதே அணல் பறக்கிறது கோடம்பாக்கதில்! படத்தின் திரைக்கதைப்படி முதலில் ஹெலிகாப்டர் சேஸிங் மட்டுமே இருந்திருகிறது.
பிரேஸில் நாட்டில் ஹாலிவுட் ஆக்‌ஷன் கலைஞர்களைக் கொண்டு இந்த ஹெலிஹாப்டர் சேஸிங்கை எடுக்க திட்டமிட்டு இருந்தார்கள். பட்ஜெட்டில் இந்த செஸிங் மட்டும் 5 கோடியை விழுங்க தயாராக இருந்திருக்கிறது. இத்தனை செலவு செய்து ஒரு ஸ்கை செஸிங் எடுப்பதை விட இன்னும் கொஞ்சம் செலவு செய்து,
அந்த சேஸிங்கை ஸ்கை பைட் சீனாக எடுத்தால் என்ன என்றாராம் அஜித்! இயக்குனர் சக்ரிக்கு இந்த ஐடியா பிடித்துப் போக உடனடியாக தயாரிப்பாளரின் அனுமதி பெற்றி, ஹெலிஹாப்டர் சேஸிங் காட்சியை , சேஸிங் கம் ஸ்கை பைட் காட்சியாக ஏழுகோடி செலவில் எடுத்து முடித்திருகிறது பில்லா இரண்டாம் பாகத்தின் படக்குழு.
இந்திய சினிமாவிலோ, தமிழ்சினிமாவிலோ இதற்கு முன்பு இப்படியொரு பைட் இடம்பெற்றதே இல்லை என்கிறார்கள். விரைவில் நடக்க இருக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் இந்த சேஸிங் மற்றும் பைட் சீன் பற்றியே பேசப்போகிறதாம். இதுவரை பில்லா படத்துக்கு 26 கோடி ரூபாய் செலவழித்திருகிறார்கள் என்று தகவல் கிடைக்கிறது.

இதற்கிடையில் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜித், நயந்தாரா நடிக்கும் படத்தில் ஆர்யா-அமலா பால் இடம்பெற இருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திக்கு இயக்குனர் விஷ்ணுவர்த்தனோ,
தயாரிப்பாளர் தரப்போ மறுப்பு தெரிவிக்க வில்லை. இதுபற்றி உண்மை நிலையை அறிய, ஆர்யாவை தொடர்பு கொண்டபோது அவர் பதில் தராமல் மௌனம் காத்து வருகிறார். விரைவில் இந்தப் படம் பற்றிய அதிகார பூர்வ அறிவிப்பு அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதி சந்தேகம் இல்லை!

Tuesday, 7 February 2012

கமலின் தலைவன் இருக்கின்றானில் ஜாக்கி சான்


ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் பெயரைச் சொன்னாலே குட்டீஸ் எல்லாம் ஆ, ஊ என்று ஆரம்பித்துவிடுவார்கள். அவர் தனது நடிப்பால் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
இந்நிலையில் இதுவரை ஹாலிவுட் மற்றும் சீன படங்களில் நடித்த ஜாக்கி சான் முதன்முறையாக கோலிவுட்டில் நடிக்கிறார். கமல் தலைவன் இருக்கின்றான் என்ற படத்தை இயக்குகிறார்

Monday, 6 February 2012

அஜித்-ஆர்யா-நயன்தாரா கூட்டணியில் விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படம்!


அஜித்தை வைத்து விஷ்ணுவர்தன் இயக்க இருக்கும் புதிய படத்தில், அஜித்துக்கு ஜோடியாக நயன்தாராவும், கூடவே இன்னொரு முக்கிய ரோலில் ஆர்யா நடிக்க போவதாகவும் தகவல்‌கள் வெளியாகியுள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில், அஜித் நடித்த பில்லா படம் மாபெரும் ஹிட்டானது. தொடர்ந்து அஜித்தை வைத்து பில்லா-2 படத்தையும் விஷ்ணுவர்தன் தான் இயக்குவதாக இருந்தது. ஆனால் இடையில் தெலுங்கு பட பிஸியால், விஷ்ணுவர்தன் அந்த படத்தை இயக்க முடியாமல் போனது. இதனையடுத்து அந்த பொறுப்பை உன்னைப்போல் ஒருவன் சக்ரி டோல்டி ஏற்றார். தற்போது இப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது, கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது.

Sunday, 5 February 2012

அஜித்,விஜய் படத்திற்கு இசை அமைக்க முடியுமா ? இளையராஜா!


கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக் இசைஞானி இளையராஜா கவுதம் மேனன் படத்திற்கு இசை அமைக்க ஒப்புக் கொண்டது தான். நிலைமை இப்படி இருக்க தற்கால திரைப்படங்கள் மீது இளையராஜாவுக்கு இன்னமும் ஏதோ சின்ன நெருடல் இருக்கத்தான் செய்கிறது என்பது அண்மையில் நடந்த “தோனி” பட ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர் பேசியதில் இருந்து அப்பட்டமாக தெரிகிறது.

திருடர்களுடனும், குண்டர்களுடனும் கூட்டணி இல்லை : ராகுல் காந்தி தாக்கு


உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் தேர்தலுக்கு பிறகு எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது. குறிப்பாக திருடர்கள் மற்றும் சமூகவிரோதிகளுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என
காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்படலாம் எனவும், தொங்கு

Monday, 30 January 2012

நயன்தாரா ரிட்டன்ஸ்! எடுத்த எடுப்பிலேயே ரூ.1.5 கோடி சம்பளம்!


காதல் கசந்துவிட்டதால் மீண்டும் நடிக்க ஆரம்பத்திருக்கும் நயன்தாராவுக்கு எடுத்த எடுப்பிலேயே ரூ1.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். தமிழ், தெலுங்கில் டாப் நடிகையாக வலம் வந்தவர் நயன்தாரா. பிரபுதேவாவை திருமணம் செய்ய இருந்ததால், தெலுங்கில் ஸ்ரீராம்ராஜ்யம் படத்தோடு நடிப்பிற்கு முழுக்கு போட்டார். சினிமாவை விட்டு விலகுவதற்கு முன்பு வரை அவருடைய மார்க்கெட் ரேட்டிற்கு எந்த சரிவும் இல்லை. நல்ல நிலையிலேயே அவர் சினிமாவை விட்டு நீங்கினார்.

Wednesday, 25 January 2012

நிர்வாணமாக நடிக்கிறாரா காதல் சரண்யா?


கோலிவுட்டின் சமீபத்திய ஹாட் டாக் காதல் சரண்யாவைப் பற்றியது தான். அம்மணி காதல், பேராண்மை என சொற்ப படங்களில் தான் நடித்திருக்கிறார். இந்நிலையில் மழைக்காலம் என்ற படத்தில் முக்கிய ரோலில் நடிக்கும் சரண்யாவுக்கு இதுவரை அவர் வாங்கிராத சம்பளம் அளிக்கப்பட்டுள்ளதாம்.

வடிவேலு பட பாணியில் போலீஸ் ஏட்டை கடத்திய ஆட்டோ டிரைவர் !

நாகர்கோவிலில் குடிபோதையில் ஏட்டை கடத்திய ஆட்டோ டிரைவரை போலீசார் தர்மஅடி கொடுத்து கவனித்தனர். சினிமா ஒன்றில் மாமூல் கேட்கும் போலீசாக நடித்த வடிவேலுவை கடத்தி சென்று வேறு மாநிலத்தில் இறக்கி விடுவது போன்ற காட்சி வரும். இதனை கண்டு சிரிக்காதவர்கள் இருந்திருக்க முடியாது. இந்த காட்சியை பார்த்தோ என்னவோ நாகர்கோவிலில் குடிபோதையில் வந்த ஆட்டோ டிரைவர் ஏட்டை கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2012 இன் ஆஸ்கார் பரிந்துரைகள்


84 வது அகடமி விருதுகளுக்கான ஆஸ்கார் பரிந்துரைகள் நேற்று கலிபோர்னியாவில் (ஜனவரி 24) அறிவிக்கப்பட்டுள்ளன.
எதிர்வரும் பெப்ரவரி 26ம் திகதி, லாஸ் ஏஞ்ஸல்ஸின் கோடாக் தியேட்டரில் பிரமாண்டமாக நடைபெறும் அகடமி விருதுகள் வழங்கும்  விழாவில் ஆஸ்கார் விருதுகளை குவிக்க போகும் திரைப்படங்கள் இந்த பரிந்துரைகளில் (Nominations) இருந்தே தெரிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2011-12 ம் ஆண்டு வெளிவந்த ஹாலிவூட் மற்றும் சர்வதேச திரைப்படங்களின் தரத்தின் அடிப்படையில் இப்பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.

Sunday, 22 January 2012

சுரேஷ் கோபியின் முல்லை பெரியாறு முடிவு

முல்லைப் பெரியாறு பிரச்னையில் கேரள நட்சத்திரங்கள் பலர் தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும்
பாதகமில்லாத நடுநிலையான நிலைபாட்டில் இருந்துகொண்டு மீடியாவைக் கவர்ந்து வருகிறார்கள். மம்முட்டி சத்தமில்லாமல் முதல்வர் ஜெயலலிதாவை வந்து சந்தித்து விட்டு சென்றிருகிறார்.

தற்போது நிபுணர் குழு அறிக்கை  தமிழகத்துக்கு  சாதகமாக வந்திருக்கும் நேரத்த்தில்  தமிழகம், கேரளா என இரண்டு மாநிலங்களிலும் பிரச்ச்னை மேலும் கொளுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. இந்த சிக்கலான நேரத்தில், பிரச்னையை சுமூகமாகத் தீர்க்க வேண்டும் என்று  நினைக்கும்  முன்னனி மலையாள  நட்சத்திரங்களான, சுரேஷ் கோபி, திலீப், முகேஷ், இயக்குநர்கள் சித்திக், கமல் உள்ளிட்ட சில

Saturday, 21 January 2012

பில்லா -2 வெளிநாட்டு உரிமை: 1 மில்லியன் டாலர்


அஜீத் நடிக்கும் பில்லா 2 படத்தின் வெளிநாட்டு உரிமை, இதுவரை அவரது படங்கள் விற்காத அளவு 1 மில்லியன் டாலருக்கு விற்கப்பட்டுள்ளது.
அஜீத்தின் பில்லா 2 படப்பிடிப்பு நிறைவுக் கட்டத்தை அடைந்துள்ளது. இப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு உள்ளதால், படத்தை வாங்க உள்ளூரில் பெரும் போட்டி ஏற்பட்டுள்ளது.

Friday, 20 January 2012

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை: விஜயகாந்த்


ஆட்சி மாறியதே தவிர போலீஸ் துறையில் காட்சி மாறவில்லை. நாள்தோறும், கொலை, கொள்ளை, நகை பறிப்பு, வழிப்பறி என, குற்றச்செயல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: கொலை, கொள்ளை, கற்பழிப்பு, நகை பறிப்பு, வழிப்பறி சம்பவங்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், கடந்த ஆட்சியை மக்கள் அகற்றினர். ஆனால், போலீஸ் உயர் அதிகாரிகள் முதல் காவலர் வரை, கடந்த ஆட்சியாளர்களிடம் வைத்திருந்த தொடர்பும், பழக்க

Thursday, 19 January 2012

வங்கிக் கணக்கில் 49 ஆயிரம் கோடி ஆசிரியர் அதிர்ச்சி

தனது வங்கிக் கணக்கில் திடீரென 49 ஆயிரம் கோடி இருப்பு இருந்ததைக் கண்டு மேற்கு வங்க ஆசிரியர் ஒருவர் அதிர்ச்சி அடைந்தார்.
பலூர்கட்டில் உள்ள சக்ரம் பிரஜாலல் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றும் பரிஜத் சஹா என்பவர் தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ 10 ஆயிரம் எடுத்துவிட்டு நிலுவைத் தொகை எவ்வளவு உள்ளது என்று பார்த்துள்ளார். நிலுவைத் தொகை 49,570,08,17,538 என்று காட்டியுள்ளது. இதில் அதிர்ச்சி அடைந்த அவர் ஒருவாரம் யாரிடமும் தெரிவிக்கவில்லை. பின்னர் கமாரபரா எஸ்பிஐ

சட்டரீதியான நடவடிக்கையை சந்திக்க தயாராகுங்கள் : கூகுள் பேஸ்புக்கிற்கு PCI எச்சரிக்கை


இந்தியாவை பற்றி வெளியிட்டு வரும் ஆட்சேபணைக்குரிய கருத்துக்களை நீக்காவிடின் சட்டரீதியான நடவடிக்கையை சந்திக்க தயாராக
இருக்கும் படி கூகுள் இந்தியா, பேஸ்புக் நிறுவனங்களுக்கு இந்தியாவின் ஊடக கவுன்சில் (PCI) யின் நிர்வாக இயக்குனரும், நீதியரசருமான மார்கண்டே காத்யூ எச்சரித்துள்ளார்.

Tuesday, 17 January 2012

கொலவெறி தனுஷுக்கு எதிராக புகார்!


கொலவெறி பாடல் எழுதி பாடிய ரஜினிகாந்த் மருமகன் தனுஷுக்கு எதிராக பெண்களை இழிவுபடுத்துவதாக காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் வெளிவந்த ”மயக்கம் என்ன” என்ற ஒரு படத்தில் நடிகர் தனுஷும் அந்தப்படத்தின் இயக்குனர் செல்வராகவனும் ஒரு பாடலை எழுதியிருந்தனர். அந்தப் பாடலில் பெண்களை இழிவுபடுத்தும் பல வார்த்தைகள் இருப்பதாகக் கூறி ராமசுப்ரமணியம்

Monday, 16 January 2012

அஜீத் மகள் மனதைக் கவரும் அழகி: ராதிகா சரத்குமார்


அஜீத், ஷாலினியின் மகள் அனோஷ்கா ஒரு அழகி என்று நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.
தல அஜீத், அவரது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா மற்றும் சரத்குமார், அவரது மனைவி ராதிகா, மகன் ராகுல் ஆகியோர் அண்மையில் சந்தித்தனர். அப்போது அஜீத்தின் செல்ல மகள் தனது மனதைக் கொள்ளை கொண்டதாக ராதிகா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது,

Sunday, 15 January 2012

முல்லைப் பெரியாறு அணை கட்டிய பென்னிகுயிக்கின் 170வது பிறந்தநாள்: வைகோ மரியாதை

தனது சொத்துக்களை விற்று முல்லைப் பெரியாறு அணை கட்டிய ஆங்கிலேய பொறியாளர் பென்னிகுயிக்கின் 170வது பிறந்த நாளன்று அவரது படத்திற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

ஆங்கிலேயரின் ஆட்சிக்காலமான 19ம் நூற்றாண்டில் தென்தமிழகத்தில் மானவாரி விவசாயம் செய்து வந்தனர். 1806ம் ஆண்டு முதல் 1840ம் ஆண்டு வரை தென் தமிழகத்தி்ல் கடும் பஞ்சம் நிலவியது. இதனை கருத்தில் கொண்டு ஆங்கிலேயர்கள் நீர் ஆதாரங்களை அதிகரிக்க முடிவு செய்தனர். 

மணிரத்னம் கடைசியாகப் பிடித்த கதாநாயகி!


மணிரத்னம் இயக்கத்தில் கார்த்திக்கின் மகன் கவுதம் ஹீரோவாக அறிமுகமாகும் படம் பூக்கடை! கார்த்திக்கிற்கு
அறிமுகப்படமான அலைகள் ஓய்வதில்லை எப்படியோரு மெகா வெற்றிப் படமாக அமைந்ததோ அதேபோல, தனது மகனுக்கும் கடற்கரையை ஒட்டிய கதைக்களத்துடன் கூடிய கதை அமைந்ததும், செண்டிமெண்டலாக ஒப்புகொண்டாராம் கார்த்திக்!

மணிக்கு நச்சென்று இளம் ஹிரோ கிடைத்து விட்டாலும், அவருக்கான ஜோடியைப்

Saturday, 14 January 2012

நான் தனுஷை நம்புகிறேன்! – ஐஸ்வர்யா


சமீபத்தில் கோடம்பாக்கத்தையே கலக்கிய செய்தி என்றால் அது தனுஷ் – ஸ்ருதி ஹாஸன் விவகாரம்தான்.
செய்தி வெளியான அன்றே அதை மறுத்திருந்தார் ஸ்ருதி. ஆனால் தனுஷ் ஒன்றும் பேசவில்லை. மாறாக அன்று மாலை நடந்த 3 படப்பிடிப்பில் மனைவி ஐஸ்வர்யாவுடன் ஜாலியாக போஸ் கொடுத்திருந்தார் அவர்.

Friday, 13 January 2012

ஹீரோவாகும் சந்தானம்!


2011 இல் அதிக படங்களில் நடித்த டாலிவூட் நடிகர்கள் பட்டியலில், சந்தானம் நம்பர்.1 இடத்தை
பிடித்துள்ளார். 2012 இலும் அந்த நம்பவர்.1 இடத்தை தக்க வைப்பார் போல.. அவ்வளவு படங்கள் கைவசம் வைத்திருக்கிறார்.

ரவிக்குமார் மற்றும் ஏ.வெங்கடேஷ் ஆகியோருக்கு துணை இயக்குனராக நூற்றுக்கு மேற்பட்ட படங்களில் பணிபுரிந்துள்ள செல்வகுமார் முதன்முறையாக் திரைப்படமொன்றை இயக்கவிருக்கிறார். அதற்கு மிர்ஷி சிவா, சந்தானம், நகுல், பிரேம்ஜி அமரன் என ஒரு நகைச்சுவை பட்டாளம் ஒன்று சேரவிருக்கிறதாம்.

சமீபத்தில் கடந்த வருடத்தின் சிறந்த நகைச்சுவை நடிகர் எனும் விருதை, சிறுத்தை, வேலாயுதம்

விஜயுடன் போட்டி போடும் மைனா ஹீரோ!


ரஜினி, விஜய் ஆகிய இரண்டு பேரின் படங்கள் வெளியாகிற நாளில், மற்ற பெரிய ஹீரோக்களின் படங்களை வெளியிட,
சம்பந்தப் பட்ட படங்களின் தயாரிப்பாளர்கள் நிறையவே யோசிப்பார்கள். இதைவிட புதுமுகங்கள் அறிமுகமாகும் படங்களை சுத்தமாக வெளியிட மாட்டார்கள். மீறி வெளியிட்டால் கழுத்தில் கல்லைக் கட்டிக்கொண்டி கிணற்றில் குதிக்கிற கதைதான்.
முக்கியாக விஜய் படம் வெளியாகிற நாளில் அவரது படத்துடன் மோதி ஜெயிக்க வேண்டும் என்று துணிந்து சாதிக்துக்காட்டியிருக்கும் பெரிய நாயகன் சூர்யா மட்டும்தான்.
Related Posts Plugin for WordPress, Blogger...