மீண்டும் அணிக்கு திரும்புகிறார் யுவராஜ் சிங்?
தேர்வுக்குழுவினர் சென்னையில் 15ம் தேதி இந்திய அணியை தேர்வு செய்ய நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தேர்வுக்குழுவினர் 16 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வு செய்ய உள்ளனர். இம்முறை நுரையீரல் கேன்சரிலிருந்து மீண்ட யுவராஜ் சிங் மீண்டும் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் யுவராஜ் சிங் நுரையீரல் கேன்சரால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். கடந்த வாரம் மீடியாக்களுக்கு பேட்டியளித்த யுவராஜ் சிங், தான் முற்றிலும் குணமடைந்து விட்டதாகவும், கடந்த இரண்டு வாரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment
உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் இங்கே தெரிவிக்கலாம் ... நன்றி .....