பெண்களை கற்பழி‌த்த 5 காவல‌‌‌ர்க‌ள் ப‌ணி‌யிடை ‌நீ‌க்க‌ம்


விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் 4 பெண்கள் கற்பழிக்கப்பட்ட புகா‌ரி‌ன் பே‌ரி‌ல்இன்ஸ்பெக்டர், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் உ‌ள்பட 5 காவ‌ல‌ர்க‌ள் ப‌ணி‌யிடை ‌நீ‌க்க‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.


விழுப்புரம் மாவட்ட காவ‌ல்துறை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் பாஸ்கரன் நடத்திய விசாரணையில் 4 பெண்களையும் போலீஸ் வாகனத்தில் அவ‌ர்க‌ள் 5 பேரு‌ம் ஏற்றிச் சென்றது உண்மை என்று கண்டறியப்பட்டது.

இதன் அடிப்படையில் திருக்கோவிலூர் காவ‌ல் நிலைய இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராமநாதன், ஏட்டு தனசேகர், போலீஸ்காரர்கள் கார்த்திகேயன், பக்தவத்சலம் ஆகிய 5 பே‌ர் ப‌ணி‌யிடை ‌நீ‌க்க‌ம் செய்யப்பட்டுள்ளனர்.

இ‌ந்த நடவடி‌க்கையை ஐ.ஜி. சைலேந்திரபாபு நே‌ற்‌றிரவு எடு‌த்து‌ள்ளா‌ர்.

Comments

Popular posts from this blog

தொழில்முறை வலைப்பதிவு எப்படி

கூகுள் அட்சென்ஸ் கிடைக்கவில்லையா

இணையத்தில் பணம் சம்பாதிக்க - 1