குடிகாரர்களின் தேவைகளை நிறைவு செய்ய தமிழக அரசு முன்னேற்பாடு


தமிழக அரசுக்கு கிடைக்கும் வருவாயில் பெருமளவு குடிகாரர்களிடமிருந்து கிடைப்பதால் அவர்கள் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தேவைகளை குறைவின்றி நிறைவேற்றும் விதமாக டாஸ்மாக் கடைகளில் அடுத்த 10 நாட்களுக்குத் தேவையான மதுபானங்களை இருப்பு வைக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
2012 ஆம் ஆண்டு தொடங்க உள்ளதையொட்டி புத்தாண்டு கொண்டாட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் ரூ.200 கோடிக்கு விற்பனையை அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.டாஸ்மாக்
கடைகளில் கூட்டம் அலைமோதுவதால், மதுபானங்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 6,696 டாஸ்மாக் கடைகள் உள்ளன.சென்னையில் மட்டும் 441 கடைகள் குடிகாரர்களின் தேவையை நிறைவு செய்கின்றன.  இவ்வாண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்றும், அதற்கு முந்தைய நாளும் டாஸ்மாக் கடைகளில் மதுபான வகைகள் விறுவிறுப்பாக விற்பனையாகின.

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சராசரியாக தினமும் 45-50 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை ஆகும். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாள் ரூ.52 கோடிக்கும், கிறிஸ்துமஸ் அன்று ரூ.68 கோடிக்கும் என மொத்தம் ரூ.120 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகின.

இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபான வகைகள் மட்டும் 24ந் தேதி 1,34,000 கேஸ்கள் விற்பனையாகின. பீர் 56,000 கேஸ்கள் விற்பனை ஆனது.25 ஆம் தேதி 1,70,000 மதுபான கேஸ்களும்,93,000 பீர் கேஸ்களும் விற்பனையாகின.

புயல் அடித்தால் என்ன? சூறாவளியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டால் என்ன? குடிகாரர்களுக்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதே அரசின் கவலை!


Comments

Popular posts from this blog

தொழில்முறை வலைப்பதிவு எப்படி

கூகுள் அட்சென்ஸ் கிடைக்கவில்லையா

இணையத்தில் பணம் சம்பாதிக்க - 1