சியான் விக்ரமை ஒருதலையாக காதலிக்கும் அஞ்சலி!



சமீபத்தில்தான் நடிகர் ஜெய்யும், நானும் காதலிப்பதாக் அவ்ரும் செய்தியில் உண்மையில்லை என்று அதிரடி அறிக்கை வெளியிட்டு இருந்தார் அஞ்சலி.
ஆனால் தற்போது சினிமாவில் சியான் விக்ரமை ஒருதலையாக காதலிக்கும் வரலாற்று கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அஞ்சலி. ஷங்கரின் கிராஃபிக்ஸ் அசோசியேட்டான  கண்ணன் இயக்கத்தில் கரிகால் பெருவள மன்னனாக சியான் விக்ரம் நடித்து வருகிறார். தமிழ்சினிமாவின் கிராஃபிக்ஸ் மிரட்டலாக விஸ்வரூபத்துக்கு முன்பே வந்து தமிழ்சினிவுக்கு பெருமை சேர்க்க இருப்பதாக இப்போதே தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்தப்படத்தில் விக்ரம் ஜோடியாக பாலிவுட் நாயகி ஷெரின் கான் நடித்து வருகிறார்.

ஷெரின் தவிர அஞ்சலி இரண்டாவது நாயகியாக  நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் அஞ்சலி. கதைப்படி  மலைவாழ் மக்களின் படைத் தலைவியாக, சியான் விக்ரமின் வீரத்துக்கு தலைவணங்கி அவரை ஒருதலையாக காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம் அஞ்சலி. படத்தில் இடம்பெரும்  போர்க்களக் காட்சிகளிலும் அஞ்சலில் நடிக்க இருக்கிறாராம். இதற்காக வாள் பயிற்சி எடுக்க இருக்கிறார் அஞ்சலி என்கிறார்கள் படக்குழுவில்!

Comments

Popular posts from this blog

தொழில்முறை வலைப்பதிவு எப்படி

கூகுள் அட்சென்ஸ் கிடைக்கவில்லையா

இணையத்தில் பணம் சம்பாதிக்க - 1