இந்தியச் சமுதாயத்தின் அழிவுக்கும் இழிவுக்கும் காரணமாக அமைவது சாதி முறை


அனைவரும் சமம்

இந்தியச் சமுதாயத்தின் அழிவுக்கும் இழிவுக்கும் காரணமாக அமைவது சாதி முறையாகும். 


சாதி முறை, இந்தியச் சமுதாய மக்களைப் பல்வேறு குழுக்களாகவும் பிரிவுகளாகவும் பகுக்கிறது. கலாச்சாரமும் நாகரீகமும் வளர்ந்த போதிலும் சாதி முறை நமது சமுதாயத்தில் பெரும்பங்கு வகிக்கிறது.

இன்னும் அரசின் ஆவணங்களில் கூட ஜாதி என்ற கட்டம் ஓன்று உள்ளது . அப்படி இருக்க எவ்வாறு நமது நாட்டில் ஜாதி ஒழியும். 

இன்னும் தெருவுக்கு தெரு ஜாதியின் பெயர் அது இல்லாமல் அரசியல் கட்சி வேறு சொல்லவா வேண்டும் .  மாணவர்கள் படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் கூட ஜாதியின் பெயர் என்ன வென்று சொல்வது. அறியாத வயதில் ஜாதி என்ற உணர்வை மக்கள் மனதில் எழுந்து விடுகிறது .

இன்னும் முன்னேற்றேமில்லாத மாவட்டங்களில் ஜாதி வன் கொடுமைகள் நடந்து  கொண்டுதான் இருக்கிறது . 

இப்படியெல்லாம் இருக்க எப்படி குறையும் இந்த  ஜாதி ஜாதிவெறி  ............... 

Comments

Popular posts from this blog

பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு

நான் நடிப்பதை நிறுத்தவில்லை – நமீதா